கர்த்தர் தாங்குவார்
சங்கீதம் 37:17
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும், நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.
1. விழுகையில் கர்த்தர் தாங்குகிறார்
சங்கீதம் 37:23,24
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
24. அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
2. வியாதியாய் இருக்கிறவனை கர்த்தர் தாங்குகிறார்
சங்கீதம் 41:1,3 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார், அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
3. உத்தமத்தில் தாங்குகிறார்
சங்கீதம் 41:12
நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.