16.தமக்கு பயந்தவர்களுக்கு

சங்கீதம் 34:9

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. 

1. கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது

*சங்கீதம் 31:19*

உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! 

2.கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு அவருடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது

*சங்கீதம் 85:9*

நம்முடைய தேசத்தில் மகிமைவாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. 

3.கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு குறைவேயில்லை

*சங்கீதம் 34:9*

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. 

4. கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார்

*சங்கீதம் 103:13*

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். 

5.தமக்குப் பயந்தவர்களுக்கு உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்

*சங்கீதம் 111:5*

தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார், தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். 

6.தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்கிறார்

*சங்கீதம் 145:19*

அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். 

7.கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காக ஞாபகப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது

*மல்கியா 3:16*

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக் கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. 

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *