16.தமக்கு பயந்தவர்களுக்கு
சங்கீதம் 34:9
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
1. கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது
*சங்கீதம் 31:19*
உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
2.கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு அவருடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது
*சங்கீதம் 85:9*
நம்முடைய தேசத்தில் மகிமைவாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
3.கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு குறைவேயில்லை
*சங்கீதம் 34:9*
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
4. கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார்
*சங்கீதம் 103:13*
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
5.தமக்குப் பயந்தவர்களுக்கு உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்
*சங்கீதம் 111:5*
தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார், தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
6.தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்கிறார்
*சங்கீதம் 145:19*
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
7.கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காக ஞாபகப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது
*மல்கியா 3:16*
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக் கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
0 Comments