துதியின் வல்லமை


 

துதியின் வல்லமை

கர்த்தரைத் துதியுங்கள். நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது. துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது (சங் 147:1)

கருப்பொருள் : துதிப்பதினால் வரும் பலன்கள்

தலைப்பு : துதியின் வல்லமை

ஆதார வசனம் : சங் 147:1

துணை வசனம்: லூக் 24:53; அப் 16:25; எபி13:15

1.தேவநாமம் மகிமைப்படுகிறது (சங் 50:23]

  • மோசேயும் மிரியாமும் துதித்தபோது… (யாத் 15:1-21)

  • இருபத்துநான்கு மூப்பர்களும் துதிக்கும்போது… (வெளி 4:11)

  • அன்னாள் துதித்து தேவனைத் துதித்தபோது… (1சாமு 2:1-10)

2. கட்டுகள் அறுக்கப்படுகிறது (அப் 16:26)

  • மரண இருளின் கட்டுகள் (சங் 107:14)

  • அடிமைத்தன நுகமாகிய கட்டுகள் (எரே 2:20) 

  • பிசாசினால் உண்டான கட்டுகள் (லூக் 13:16) 

3. புதிய வாசல் திறக்கிறது (வெளி 3:8) (1கொரி 16:9)

  • சுவிசேஷத்திற்கான அநுகூலமான கதவு (1கொரி 16:9)

  • திறந்த வாசலை வைக்கிறார் (வெளி 3:8)

  • சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரிக்க செய்கிறார் (ஆதி 22:17)

 4. ஜெயம் கிடைக்கிறது (நீதி 21:31)

  • சத்துருக்கள்மேல் ஜெயம் கிடைக்கிறது (சங் 41:11) 

  • உலத்தின்மேல் ஜெயம் கிடைக்கிறது (1யோவா 5:4)

  • உலகத்துக்கடுத்த காரியங்கள்மேல் ஜெயம் கிடைக்கிறது (ரோம 8:37)

 5. சத்துருக்கள் முறியடிக்கப்படுகிறார்கள் (1சாமு 19:8)

  • அம்மோன், மோவாபியர் தோற்கடிக்கப்பட்டனர் (2நாளா 20:21,22) 

  • பாசானின் ராஜாவாகிய ஓக் அழிக்கப்பட்டான் (எண் 21:33)

  • பார்வோனும் அவன் சேனைகளும் முறியடிக்கப்பட்டனர் (யாத் 14:24)

6. தடைகள் விலகுகிறது (மீகா 2:13)

  • யோர்தான் நதி எனும் தடை விலகினது (யோசு 3:13)

  • எரிகோ கோட்டை எனும் தடை விலகினது (யோசு 6:1) 

  • சுவிசேஷம் அறிவிப்பதற்கான தடைகள் விலகினது (அப் 28:31)

7. இரட்சிப்பு உண்டாகிறது

  • சிறையிலிருப்போருக்கு இரட்சிப்பு… (அப் 16:30)

  •  சத்துருக்களிடமிருந்து இரட்சிப்பு… (2நாளா 20:21,22)

  • எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேலருக்கு இரட்சிப்பு… (யாத் 14:13)

அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிலிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேமீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள்

வெட்டுண்டு விழுந்தார்கள் (2நாளா 20:20)

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்… சடுதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடையகட்டுகளும் கழன்றுபோயிற்று

(அப் 16:25,26)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *