முன்வைத்த காலை பின்வைக் காதவர்கள்… (எபி 11:15,16)

காரணம்: விட்டு வந்தவைகள், அவர்கள் நினைவிற்கு வரவில்லை.

-(எபி 11:15)

1- ஆபிரகாமின்  கால்கள் மொசப்பத்தோமியாவிற்கு பின்வாங்கவில்லை, பரம தேசத்தை ஆண்டவர் ஆயத்தம்பண்ணியதால்

2- மோசேயின் கால்கள் எகிப்தின் பொக்கிஷங்களை நாடி, பின்வைக்கப்படவில்லை, கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையே அதிக பாக்கியமாக, அவனுக்கு தோன்றியதால். 

3- எலிசாவின் கால்கள், எலியாவைவிட்டு பின்வைக்கப்படவில்லை, இரட்டிப்பான ஆவியின் வரத்தை, அவன் வாஞ்சித்ததினால். 

4- உரியாவின் கால்கள், வீட்டிற்கு செல்லும்படி பின்வைக்கப்படவில்லை, தேவனுடைய உடன்படி்கை பெட்டி, யுத்தகளத்தில் இருந்ததினால். 

5- ரூத்தின் கால்கள், நகோமியை விட்டுவிட்டு, மோவாபிற்கு திரும்பவில்லை, இஸ்ரவேலின் தேவனை அவள் தெரிந்துகொண்டதினால். 

6- மத்தேயுவின் கால்கள், ஆயத்துறைக்கு திரும்பவில்லை, தான் எழுதும் சுவிஷேசம், சக ல ஜாதிகளுக்கும் ஆசீர்வாதமாக இருப்பதினால். 

7- பேதுருவின் கால்கள், பிறரைப் போன்று பின்வைக்கப்படவில்லை, நித்திய ஜீவ வசனத்தின்மீதான வாஞ்சையினால். 

Categories: மு

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *