பேசக்கூடாத பேச்சுகள்


 

பேசக்கூடாத பேச்சுகள்

_மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்._

 (மத்தேயு 12:36)

_தேவ பிள்ளைகளே, நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்._

பரிசுத்த வேதம் போதிக்கும் “பேசக்கூடாத பேச்சுகள்”

1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது    (யாக்கோபு 3:5)

2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது  

(1 சாமுவேல் 2:3)

3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது   

(1 சாமுவேல் 2:3)

4. வம்பு ்த்தைகளை பேசக்கூடாது         

 (சங்கீதம் 75:4)

5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது   

 (மத்தேயு 5:37)

6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது  

  (1 தீமோத்தேயு 4:7)

7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது        

  (மத்தேயு 12:36)

8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது   (நீதிமொழிகள் 15:1)

9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது           (நீதிமொழிகள் 27:2)

10. நாம் செய்த காரியங்களை நாமே

 புகழ்ந்து பேசக்கூடாது 

.    (நீதிமொழிகள்  20:6)

11. தீமையை பேசக்கூடாது                     

   (யோபு 27:3)

12. துர்ச் செய்தியை பேசக்கூடாது       

  (எண்ணாகமம் 13:33)

13. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது  

        (எபேசியர் 5:4)

14. புத்தியீனமானவைகளை

       பேசக்கூடாது    (எபேசியர் 5:4)

15. யாரையும் பரியாசம் பண்ணிப்

  பேசக்கூடாது    (எபேசியர் 5:4)

16. யாரையும் சபித்தல் கூடாது      

     (யாக்கோபு 3:10)

17. மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது                   

   (நீதிமொழிகள் 12:18)

18. இறுமாப்பான வார்த்தைகளை

பேசக்கூடாது    

  (யூதா 16)

19. கோள் செல்லுதல் கூடாது               

  (லேவியாகமம் 19:16)

20. நாவினால் புறங்கூறுதல் கூடாது     

   (சங்கீதம் 15:3)

21. பிரயோஜனமில்லாத வார்த்தைகளை

 பேசக்கூடாது    

   (யோபு 15:3)

22. தர்க்கத்தை உண்டு பண்ணும்

      வார்த்தைகளை பேசக்கூடாது    

       (யோபு 15: 3)

23. கபடான வார்த்தைகளை

      பேசக்கூடாது   (சங்கீதம் 120:2, 3)

24. கடினமான வார்த்தைகளை

       பேசக்கூடாது  (சங்கீதம் 94:4)

25. கசப்பான வார்த்தைகளை

      பேசக்கூடாது   (சங்கீதம் 64:4)

26. தகாத காரியங்களை பேசக்கூடாது 

  (1 தீமோத்தேயு 5:13)

27. மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து

 பேசக்கூடாது  

(ரோமர்  2:1)

28. இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது 

(1 தெசலேனிக்கேயர் 2:5)

29. பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது

     (நீதிமொழிகள் 29:20)

30. தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது 

     (2 பேதுரு 2:3)

31. விரோதமான பேச்சுகளை

 பேசக்கூடாது   

  (3 யோவான் 10)

32. மாயையைக் குறித்து பேசக்கூடாது    

     (சங்கீதம்144:8 )

33. ஆகாத சம்பாஷணைகள் கூடாது 

  (1 கொரிந்தியர் 15:3

34. பொய்யான வார்த்தைகளை

 பேசக்கூடாது        (சங்கீதம் 63:11)

35. கசப்பான வார்த்தைகளை

பேசக்கூடாது  

(சங்கீதம் 54:4)

36. இச்சகம் பேச வேண்டாம்

   (சங்கீதம் 12: 3)

37. கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள்

 வாயிலிருந்து புறப்பட வேண்டாம்  

 (எபேசியர் 4: 29)

   ‎

38. கள்ள நாவில் பேச வேண்டாம்

 (சங்கீதம் 109: 2)

       ‎

39. மாயையாய் பேச வேண்டாம் 

( சங்கீதம் 144:8)

40. ஒருவருக்கொருவர் விரோதமாய்

      பேசாதிருங்கள்   (யாக்கோபு 4:11)

அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?

  • கர்த்தர் செய்த அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.   

(1 நாளாகமம் 16:9)

  • பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;    

(சகரியா 8:16)

  • பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.   

(எபேசியர் 4:29)

  • ஞானத்தைப்பேசுங்கள் 

      (சங்கீதம் 49: 3)

  • யதார்த்தமாய் பேசுங்கள் 

 (சங்கீதம்  52: 3)

  • நீதியை பேசுங்கள் 

(சங்கீதம் 58: 1)

  • கர்த்தருடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுங்கள் 

(சங்கீதம் 119: 46)

  • மேம்படான காரியங்களை பேசுங்கள்

  (நீதிமொழிகள் 8: 6)

  • சுவிஷேசத்தை குறித்து பயப்படாமல் பேசுங்கள்    (அப்போஸ்தலர் 18: 9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *