மாற்றத்தை உருவாக்கிய பெண்கள்


மாற்றத்தை உருவாக்கிய பெண்கள்

 

1) எஸ்தர் – சட்டத்தை மீறி ராஜாவின் இடத்தில் பிரவேசிப்பேன் நான் செத்தாலும் சாகிறேன் – எஸ்தர் 4:16

 

2) ரூத் – உம்மை விட்டு திரும்பி போவதை குறித்து என்னோடு பேச வேண்டாம். நீர் போகும் இடத்துக்கு நான் வருவேன். நீர் தங்குமிடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். உம்முடைய தேவன் என்னுடைய தேவன் (ரூத் 1:16)

 

3) மோசேயின் தாய் யோகெபேத் பார்வோனின் ஆணையை மீறி 3 மாதம் வரைக்கும் தன் குழந்தையை ஒளித்து வளர்த்தாள் இஸ்ரவேலே வழி நடத்துகிற தலைவன் ஆனான்

யாத்திராகமம் 1:16-2:1-3

 

4) ராகாப்:- யோசுவா அனுப்பிய வேவுகாரரை தன் வீட்டில் ஒளித்து வைத்து அந்த பட்டணத்தை சுதந்தரிக்க உதவி செய்தாள் யோசுவா 2:1-24

 

5) ஏபேரின் மனைவியாகிய யாகேல் சிசெராவை கூடார ஆணியால்  கொன்றுபோட்டாள் இஸ்ரவேலுக்கு ஜெயம் கிடைத்தது

நியாயாதிபதிகள் 4:18:23

 

6) தெபோராள் துணிந்து பாராக்குடன் யுத்தத்திற்கு சென்றாள் இஸ்ரவேலை வழிநடத்தினாள் நியாயாதிபதிகள் 6:31

 

7) அபிகாயில் துணிந்து போய் தாவீதை சந்தித்தாள் அதனால் அவள் குடும்பம் காப்பாற்றப்பட்டது தாவீதுக்கு மனைவியானாள்

1 சாமுவேல் 25ம்அதிகாரம்

 

8) மரியாள் துணிந்து

இயேசு கிறிஸ்துவை சுமந்த தாயாக தன்னை அர்ப்பணித்தாள். முழு உலகத்தையும் இரட்சிக்க இரட்சகரை உலகத்தில் கொண்டு வந்தாள்

லூக்கா 1:27-38

 

9) ரோதை:- பேதுரு சிறையில் இருந்து தூதனால் வெளியே கொண்டுவரப்பட்டு வாசல் கதவை தட்டும் போது துணிந்து கதவை திறந்தாள் – அப் 12:13-16

 

10) மகதலேனா மரியாள்: வாரத்தின் முதல் நாள் காலையில் அதிக இருட்டோடு கல்லறைக்கு துணிந்து வந்தாள் – யோ 20:1

 

11) 12 வருஷம் பெரும்பாடுள்ள ஸ்திரி: பல பேர் இயேசுவோடு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த வேளையில் இவள் துணிந்து இயேசுவின் வஸ்திரத்தை துணிந்து தொட்டாள் (மத் 9:20-22

 

12) ஆபிராமுக்கு கர்த்தர் அருளிய ஈவு சாராள்: விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் முன் உதாரணமாய் வேதம் சாராளை முன்வைக்கிறது (எபி 11:11, 1 பேது 3:5,6)

 

13) ஈசாக்கு கர்த்தர் நியமித்து வைத்திருந்த  ஈவு ரெபேக்கா ஜெப வாழ்விற்கு முன்மாதிரி தம்பதிகள. பிள்ளைகள் கர்ப்பத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டிருக்கும்போது ரெபெக்காள் கர்த்தரிடம் செல்கிறாள். இரட்டிப்பான ஆசிர்வாதம் பெற்றாள்

 

14) எல்கானாவுக்கு கர்த்தர் கிருபையாய் அருளிய ஈவு அன்னாள்

4) சகரியாவுக்கு தேவன் அருளிய ஈவு எலிசபெத் இவர்கள் இருவரும் கர்த்தரிட்டசகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றவர்களாய் நடந்து தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள் (லூக் 1:6)

 

15) ஆக்கில்வாவுக்கு கர்த்தர் அருளிய ஈவு பிரிஸ்கில்லாள் கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகளாய் இருந்தார்கள் (அப் 8:2,3) வீட்டில் திருச்சபை கூடி வந்ததாய் பாரக்கிறோம் (1 கொரி 16:19). பவுலுக்கு உடன் வேலை ஆட்களாக தங்களுடைய கழுத்தை கொடுத்தார்கள் (ரோ 16:3,4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *