கர்த்தர் பெரியவர்

சங்கீதம் 48:1

கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். 

1.தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் – உயர்ந்தவர் ஆராதிக்கப்படத்தக்கவர்

2 நாளாகமம் 2:5

எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர், ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும். 

(யாத் 18:11 , 2 சாமு 7:22)

2.யோசனையிலே பெரியவர் – சர்வ வல்லவர்

எரேமியா 32:19

யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர், அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன. 

3.உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் – ஜெயம் அளிப்பவர்

1 யோவான் 4:4

பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 

4.நம்முடைய இருதயத்திலும் பெரியவர்- எல்லாம் அறிந்தவர்

1 யோவான் 3:20

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். 

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *