சாத்தானின் ஆயுதங்கள்


 

சாத்தானின் ஆயுதங்கள்

 1. மனிதன் மனதைக் குருடாக்குவது

_2 கொரிந்தியர் 4 : 4_  

_தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்._ 

_ஆதியில் பரலோகத்தில் அவனுக்கு உள்ள இடத்தை இழந்து போனவனே சாத்தான்.  பரலோக சிம்மாசனத்திற்கு ஆசைப்பட்டதால் வெட்டி வீழ்த்தப்பட்டவன்._  

_(ஏசாயா 14 :12-15)_ 

_தேவனுக்கு எதிராக விழுந்து போன தூதர்களையும்  சேர்த்துக் கொண்டு  அவிசுவாசிகள் மனதை குருடாக்குகிறான்._

2.   அவன் கண்காணிக்கும் ஆயுதம்

_ஆதியாகமம் 3 : 15_

_(சர்ப்பம்) உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்;_ _அவர் (கர்த்தர் இயேசு) உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்._ 

_சாத்தான் நினைத்தது போல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தாலும் அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்பதை அவன் அறியவில்லை.  ஆதாம் காலத்திலிருந்து ஸ்திரீயையும வித்தையும்  ஆபிரகாம், மோசே, தாவீது முதல் தேடியும் தேவனின் ஆவிக்குரிய திட்டத்தை அறிய முடியவில்லை._ 

 3. பிசாசிற்கு தரிசனங்களை காட்டவும் முடியும்.  இதுவும் ஒரு ஆயுதம்.

_மத்தேயு 4 : 8- 9_

 _மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:_ 

_நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்._ 

_ஏமாந்து விடக்கூடாது. சாத்தான் இயேசுதான் “வித்து”வா என கண்டறிய தந்திரம் செய்தான். இயேசு கிறிஸ்து பசியோடு இருந்ததால் கல்லை அப்பம் ஆக்க முடியுமா என ஆசைக் காட்டினான். ஆனாலும் கர்த்தர் ஞானமாகப் பேசினார்._

4. மாம்ச இச்சைகளை ஈர்க்க வைப்பதும் சாத்தானின் ஆயுதம்

_6 பேதுரு 2 : 11_  

_பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள்._

  5. கசப்பான வேர்களை நமக்குள் ஊடுருவச் செய்வதும் சாத்தானின் ஆயுதம்

_எபிரெயர் 12 : 15-16_

_ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,_ 

_ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்._

 6. உலகப் பொருளின் மீது ஆசை உண்டாக்குவது,  இதுவும் ஒரு ஆயுதம்

_1 யோவான் 2 : 15-16_

 _உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை._ 

_ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்._

 7. கீழேயுள்ள இவைகளே அவனுடைய கடைசி ஆயுதம்

 

_கலாத்தியர் 5 : 19- 21_

 _மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன:_ _விபசாரம்,_ _வேசித்தனம், அசுத்தம்,_ _காமவிகாரம்,_ 

_விக்கிரகாராதனை, பில்லிசூனியம்,_ _பகைகள், விரோதங்கள்,_ _வைராக்கியங்கள், கோபங்கள்,_ _சண்டைகள், பிரிவினைகள்,_ _மார்க்கபேதங்கள்,_ 

_பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே;_ _இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே_ 

_நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்._ 

_தேவ ஆவியின் துணையோடு பிசாசை எதிர்த்து நில்லுங்கள்._ 

_யார் தருகின்ற தரிசனம் என்றும், யாருடைய கட்டளை என்றும் பகுத்தறிந்துக் கொள்ளுங்கள். பகுத்தறியும் வரத்தை ஜெபத்திலே வேண்டி பெற்றுக்கொள்ளுங்கள்._ 

_கிறிஸ்து இயேசுவோடு நாம் கொண்டிருக்கும் ஐக்கியம், உறவினால் நலமானதை எளிதாக அறியலாம்._ 

நம்முடைய ஆயுதங்கள் என்ன?

_எபேசியர் 6: 11 – 13_

_நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்._ 

_மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு._ 

_ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்._ 

_என்ன சர்வ ஆயுதங்கள் என பார்ப்போம்._ 

_எபேசியர் 6: 14 -18_

_1. சத்தியம் என்னும் கச்சையை_ 

_2. நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;_  

_3. விசுவாசமென்னும் கேடகம்_ 

_4. இரட்சிப்பு என்னும் தலைக்கவசம்_  

_5. தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்.._

_6.இவை எல்லாவற்றிற்க்கும் மேல்,ஜெபத்தை எடுத்துக்கொள்ளுங்கள்…._

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *