சிங்கம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்
1) சிங்கம் கெர்ச்சிக்கிற ஒரு மிருகம் (வெளி 10-3)
பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பரிப்பார்கள் (துதி) (சங் 132-16).
நீதிமான்களின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு (சங் 118-15).
சிங்கத்தை போல நாமும் கர்த்தரை கெம்பிரமாக துதிக்க வேண்டும் (2 நாளா 20:19)
2) பின்னடையாது (நீதி 30-30)
தேவ ஜனங்கள் அவிக்குரிய வாழ்க்கையில் பின்னடைய கூடாது.
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் – எபிரேயர் 10:38.
பாடுகளில், உபத்திரங்களில் பின் வாங்கி போய் விட கூடாது (லூக் 8:13)
3) தைரியமான மிருகம் (நீதி 28-1)
நாமும் சிங்கத்தை போல தைரியமாக இருக்க வேண்டும்.
நம்முடைய இருதயம் குற்றமற்றதாக இருந்தால் தைரியம் காணப்படும் (1 யோ 3-21).
விசுவாசத்தினால் நமக்கு தைரியம் கிடைக்கும் (எபேசி 3-12)
4) பலமானது (நியாதி 14-18)
நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் பலத்தின் மேல் பலன் அடைந்து தேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள் – சங் 84-7
5) அதனுடைய கெபி ஆகாரத்தினால் நிரம்பி இருக்கும் (நாகூம் 2-12)
தேவபிள்ளைகளுக்கு ஆகாரம் வேத வசனம் (உபா 8-3).
வேத வசனங்களை நமது உள்ளத்தில் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும்.
அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய் காத்து கொண்டேன் (யோபு 23-12)
6) சிங்கம் தன் குட்டிகளுக்கு ஆகார குறைவு இல்லாதபடி பார்த்துக் கொள்ளும்
அது போல நமது பரம தகப்பன் நமது தேவைகளை எல்லாம் தருகிறார், சந்திக்கிறார். (பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது – மத் 7-11)
7) பயப்படாது
தேவ பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்தில் பயப்பட கூடாது.
ஏன் இப்படி பயப்பட்டிர்கள், ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று என்றார் (மாற்கு 4-40).
விசுவாசம் குறைந்தால் பயம் வரும்.
8) மறைவிடத்தில் தங்கும் (புலம்பல் 3-10)
மறைவிடம் தாழ்மையை குறிக்கும்.
நமது பேச்சு, உடை, கிரியை அனைத்திலும் தாழ்மையை வெளி படுத்த வேண்டும்
9) காட்டுக்கு ராஜா
நாமும் 1000 வருஷ அரசாட்சியில் ராஜாவாக இந்த உலகத்தை ஆளுவோம் (வெளி 1-6)
0 Comments