ஜெபிக்க நேரமில்லை
1) 👉 (ஏனோக்கு)
- பிள்ளைகள் இருக்கிறார்கள் ஜெபிக்க முடியவில்லை என்கிறார்கள் சிலர்
- குமாரையும் குமாரத்திகளையும் பெற்றெடுத்த ஏனோக்குக்கு தேவனோடு சஞ்சரிக்க (ஜெபிக்க)நேரமிருந்தது.(ஆதி-5:24)
2) 👉 (மோசே)
- தேசத்தின் தலைவனாய் உயர்ந்த நிலையில் மோசே நான் இல்லாவிட்டால் காரியங்கள் சரியாக நடக்காது எல்லாம் என் தலையில் தான் நடக்கிறது என சொல்லாமல் தேவனோடு தனிமையாய் இருக்க நேரமிருந்தது.(யாத்-34:24)
3) 👉 (ஆபிரகாம்)
- பூமி தாங்க கூடாத செல்வம் திரளான ஆடு மாடு வேலைக்காரர்கள் நிர்வாகிக்க நேரமில்லாமல் மேய்ப்பர்களுக்குள் மோதல் அத்தனை பிரச்சினை மத்தியில் ஆபிரகாமுக்கு ஜெபிக்க நேரமிருந்தது. (ஆதி -18:22)
4) 👉 (தாவீது)
- சமஸ்த இஸ்ரயேலுக்கும் ராஜா யுத்தம் ,நீதி நியாயம் செய்யணும். ஆனாலும் அந்தி சந்தி மத்தியானம் என மூன்று வேளையும் அரசனான தாவீது க்கு ஜெபிக்க நேரமிருந்தது. (சங்-55:17)
5) 👉 (தானியேல்)
- அடிமையாக வந்து அரசனுக்கு அடுத்த பதவியில் உயர்த்தப்பட்டாலும், தொழுது கொள்ளக் கூடாது என சட்டம் போட்டு தடுத்தாலும் ஜெபத்திலே தரித்து இருக்க தானியேலுக்கு நேரமிருந்தது. (தானி-6:10)
6) 👉 (சீஷர்கள்)
- 3000, 5000 என மக்கள் சபையில் சேர்ந்த நேரம் பந்தி விசாரிக்க கூட நேரமில்லாத சூழ்நிலையிலும் சீஷர்களுக்கு ஜெபிக்க நேரமிருந்தது. (அப்-6:4)
7) 👉 (அப்போஸ்தலனாகிய பவுல்)
- ஐரோப்பிய கண்டம் முழுவதும் சபைகளை ஸ்தாபித்த அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இரவும் பகலும் இடைவிடாமல் ஜெபிக்க நேரமிருந்தது. (எபே-1:16 ) (1தெச -1:2)
8) 👉 (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து)
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வுக்கு இடைவிடாது ஊழியம். உணவு சாப்பிட கூட நேரமில்லாமல் இருந்தாலும் ஜனங்கள் எப்பொழுதும் சூழ்ந்து கொண்டு இருந்தாலும் பிதாவோடு உறவாட பேச நேரமிருந்தது. லூக்-6:11,12 , மாற்கு -6:31,46
👆👆👆👆👆ஆனால் இன்று நமக்கு நேரம் இல்லை கடைசியாக ஆண்டவர் சொல்வார், உன்னை ஆசீர்வதிக்க எனக்கு நேரம் இல்லை…