26.தாயை கனம்பண்ணு
நீதிமொழிகள் 31 : 28
அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்;
1.தாய்க்கு பயந்து நடக்க வேண்டும்
லேவியராகமம் 19:3
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
2. தாயின் போதகத்தைத் தள்ளாதே.
நீதிமொழிகள் 1 : 8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
3.பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்
எபேசியர் 6 : 1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்
4.தாயை கனம்பண்ணு
எபேசியர் 6 : 2
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
5.தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே
நீதிமொழிகள் 23:22
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
6.தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்று சொல்லாதே.
ஏசாயா 45 : 10
தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!
7.தாயை அலட்சியம்பண்ணணாதே
நீதிமொழிகள் 15 : 20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்
ஏசாயா 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
Bro. Jeyaseelan, Mumbai,