வேதத்தில் இரண்டு (2)
1) 2 பேர் ஜெபம் பண்ண ஆலயம் சென்றார்கள் – லூக் 18:10
2) விதவை 2 காசு காணிக்கை போட்டாள் – மாற் 12:42
3) 2 மீன் 5 அப்பம் – மத் 6:41
4) 2 எஜமானுக்கு ஊழியம் செய்ய முடியாது – மத் 6:24
5) 2 பேர் ஒருமனப்பட்டு ஜெபித்தால் அது கேட்கப்படும் – மத் 18:19
6) சேவல் 2 தரம் கூவும் முன்னே நீ 3 தரம் மறுதலிப்பாய் – மாற் 14:72
7) 2 கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டார்கள் – மத் 27:38
8) 2 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டது – மத் 25:15
9) 2 பேர் வயலில் இருப்பார்கள். ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், ஒருவன் கைவிடப்படுவான் – மத் 24:40
10) 2 ஸ்திரிகள் எந்திரம் அறைப்பார்கள். ஒருத்தி ஏற்றுக் கொள்ளபடுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள் – மத் 24:41
11) ஒரே படுக்கையில் படுத்திருக்கிற 2 பேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், மற்றவன் கைவிடப்படுவான் – லூக் 17:34
12) 2 பேர் இயேசுவின் நாமத்தில் கூடியிருக்கும் இடத்தில் கர்த்தர் இருப்பார் – மத் 18:20
13) ஒரு காசுக்கு 2 அடைக்கலான் குருவிகள் – மத் 10:29
14) 2 அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்கு கொடுக்ககடவன் – லூக் 3:11
15) 2 காசுக்கு 5 அடைக்கலான் குருவிகள் – லூக் 12:6
16) ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால் அவனோடு 2 மைல் தூரம் போ – மத் 5:41
17) வாரத்தில் 2 தரம் உபவாசிக்கிறேன் என்று பெருமையோடு பரிசேயன் ஜெபித்தான் – லூக் 18:12
18) இயேசுவின் சரீரம் வைக்கபட்டிருந்த இடத்தில் 2 தூதர்கள் தலைமாட்டில் ஒருவனும், கால்மாட்டில் ஒருவனும் உட்காரந்திருப்பதை மரியாள் கண்டாள் – யோ 20:12