வேதத்தில் உள்ள மாடுகள்
1) அடிக்கபடும்படி செல்லும் மாடு (நீதி 7:22)
தேவ ஜனங்கள் அடிக்கபடுகிற மாடு போல காணப்பட வேண்டும். இது பாடுகளின் பாதையை காட்டுகிறது. கசாப்பு கடைக்கு செல்லும் மாடுகள் கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லபடும். இயேசு சென்ற பாதை இது (அப் 8:32). தம்முடைய அடிச்சுவடியை தொடர்ந்து வரும் படி மாதிரியை வைத்து போனார்( 1 பேது 2:21) தேவ ஐனமே எனக்கு ஏன் பாடுகள் என்று நினனக்காதே. அநேக உபத்திரவங்களின் வழியாக தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் (அப் 14:22)
2) புல்லை தின்னும் மாடு (ஏசா 1:3)
மாடுகள் வழியில் புல்லை வேகமாக உண்டு செல்லும். மாலையில் புல்லை வாய்க்கு கொண்டு வந்து அசை போடும். அது போல தேவ பிள்ளைகள் சபையில் கேட்ட சத்தியங்களை வீட்டிற்கு சென்று தியானிக்க வேண்டும். இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1:2) அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் சங் 1:3)
3) எருது பலமுள்ளது (சங் 144:14)
வசனத்தை தியானிக்க தியானிக்க பெலன் அடைகிறோம். சீயோனில் தேவ சந்ததியில் காணப்பட பெலன் தேவை (சங் 84:7)
4) நிலத்தை உழுகிற எருது (ஏசா 30:24)
இது தேவ சித்தத்தை காட்டுகிறது.
5) சர்வாங்க தகனபலியான மாடு (எண்ணாக 7-35)
நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் – ரோ 12:1
6) மேய்ப்பனை குறித்து அறிந்த மாடு (ஏசா 1:3)
மாட்டுக்கு தன் மேய்ப்பனை குறித்து நல்ல அறிவு உண்டு. கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார். நான் தாழ்ச்சி அடையேன் (சங் 23:1) என்ற அறிவு ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு வேண்டும்.
7) மாடுகள் நல்ல மேய்ச்சல் உள்ள இடத்தில் மேயும் (ஏசா 30:23)
அது போல நாமும் சத்தியத்தை போதிக்கிற சபையை தேடி செல்ல வேண்டும். கடமைக்கு (Sunday) சபைக்கு செல்ல கூடாது. சத்தியத்தை கேட்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வேண்டும்
8) ஒய்வு நாளில் வேலை செய்யாத மாடுகள் (யாத் 23:12)
தேவபிள்ளைகள் ஒய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேசக்கூடாது (ஏசா 58:13). ஏனென்றால் ஒய்வு நாள் கர்த்தருக்குரியது. ஒய்வு நாளை கனப்படுத்த வேண்டும். ஒய்வு நாளை கனப்படுத்தினால் நாம் ஆசிர்வதிக்க படுவோம் (ஏசா 53:14)
9) நுகத்தை சுமக்கும் மாடு (மத் 11:29)
இது தாழ்மையான ஜிவியத்தை காட்டுகிறது. இயேசுவும் மாட்டை போல ஜிவித்து இருக்கிறார் (என் நுகத்தை ஏற்றுக் கொண்டு – மத் 11:29)
10) மாடுகள் கூட்டம் கூட்டமாக செல்லும்
இது பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை காட்டுகிறது. சகல பரிசுத்தவான்களோடு கூட கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் (எபேசி 3:18). வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஆகிய இந்த மூன்றும் நமக்கு சந்தோஷத்தை தருகிறது.
11) களஞ்சியங்களை நிரப்பும் எருது (நீதி 14:4)
சபை ஆத்துமாக்களால் நிரப்பபட வேண்டும்.
ஜனங்கள் இரட்சிக்கபட நாம் அவர்களுக்கு சுவிஷேம் சொல்ல வேண்டும், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்
0 Comments