7 விதமான மான்கள்
1. நீதிமான் – மத்தேயு 10 : 41
தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளு
கிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
2. கல்விமான் – மத்தேயு 11 : 25
அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
3. புத்திமான் – I கொரிந்தியர் 10 : 15
உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லு
கிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
4. மகாபுத்திமான் – நீதிமொழிகள் 14 : 29
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.
5. எஜமான் – லூக்கா 19 : 17
எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
6. சீமான் – ஆதியாகமம் 24 : 35
கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளி
யையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
7. அநீதிமான் – அப்போஸ்தலர் 24 : 15
நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திரு
ப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டி
ருக்கிறதுபோல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.
Bro. Jeyaseelan,
Mumbai,
Mob : 9820532501
0 Comments